Saturday, September 01, 2018

நாமதேவர்:

 நாமதேவர் , சந்திரபாகா நதிதீரத்திலேயே அமர்ந்து பஜனை செய்துகொண்டிருந்த 
பொழுது , ஒரு நாய்அவருக்காக
 அவர் மனைவி , வைத்துச் சென்ற  ரொட்டியை , கவ்விக் கொண்டு ஓடிவிட்டது .
 அதைக்கண்ட நாமதேவர் அதன் பின் ஓடிய படியே , " பாண்டுரங்கா .இந்த நெய்யையும் சர்கரையும் ,  ரொட்டியுடன்
 சேர்ந்து சாப்பிடு " என்று நாயை பிடிக்க முயன்ற போது , அங்கு நாய் மறைந்து ,
 பாண்டுரங்கனே ,அவருக்கு தரிசனம் தந்தார் .
இதே போல்  ஏகநாதரும் . காசியிலிருந்து ,ஸமாராதனைக்காக , எடுத்து செல்லும்
 காங்கா  ஜலத்தை , சாகும் தருவாயில் இருந்த ஒரு கழுதைக்குகொடுத்தார் . அப்போது
 அங்கு கழுதை , மறைந்து
ஏகநாதருக்கு பாண்டுரங்கனின் தரிசனம் கிடைத்தது.
   ஜீவன்கள் படும் அவஸ்தையை , கண்டு மஹான்களால் , பரிதவிக்காமல் இருக்க
 முடியாது .
இதைதான் பகவான் " ஸர்வபூத ஹிதோரத " என்கின்றான்  அதாவது ,   அவர்கள் எல்லாவற்றிலும் 
பகவானையே பார்க்க அத்தகையோர்  என்னையே அடைகிறார்கள் என்கிறான்
 பகவான் கிருஷ்ணன்..
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!

பகவத் கீதை...

Inbox
x

rnateshan

8:44 PM (39 minutes ago)
to me
 
Translate message
Turn off for: Tamil
#பகவத்கீதையில்_பார்த்துப்_பார்த்துத்_தேர்ந்தெடுத்த_அற்புதமான_அறிவுரைகள்:     

 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. 

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. 

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். 

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. 

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. 

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. 

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. 

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், 
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. 

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. 

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. 

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, 

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; 

நாளைய பொழுதும் நிச்சயமில்லை; 

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. 

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். 

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. 

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

(பகிர்ந்தவர்  :   பேராசிரியர் விஷ்வநாத் தாஸ்)


வேதாந்த தேசிகர்
--------------------------------
தூப்புல் வேதாந்த மஹாதேசிகன் :
===================================
செல்ல வேண்டிய   திசையை சரியாக காட்டுபவனே  தேசிகன்.

ஆசார்யன் என்பதும் இதை போலவே. 
சாரி  என்றால் சஞ்சரிப்பவன். 
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.  
கஜாச்சாரி   யானைமேல்  செல்பவன். 
எனவே  சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழிகாட்டுபவன் ஆசார்யன்.
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரு  தேசிகன் பெயருக்காக உயர்ந்தவர் என்றால்
அவரேநிகமாந்த தேசிகன் என்றும்  சுவாமி தேசிகன் என்றும் பெயர் கொண்ட தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்...
இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவசமயம் காத்த உத்தமர்.
ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள்  அவர் தாய்...
ராமானுஜரைப் போன்று  இவரால் கணீரென்று  வேத நாதம் எங்கும் ஒலிக்க  பிரகாசிப்பார் என்று  பெருமாளே  அருளினார்.  அதனால்  தான் பெருமாள் சந்நிதியில்  மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம். ....
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி
கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம்  சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,மேல்கோட்டை,காஞ்சிபுரம்,அயோத்தியா,பிருந்தாவனம்,பத்ரிநாத்,
திருவரங்கம் உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார். 
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.
இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

மாமன் அப்புள்ளார்  ஐந்து வயதில் அவரை  நடாதூர்  அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்றபோது அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்”  என்பதை  மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில்,  சரியாக  அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20  வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர்  இப்போது சுருங்கி  திருவந்திபுரம்  ஆகிவிட்டாலும்  தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும்  சுருங்கவில்லை.
இங்கு தான் ஒரு  சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி
கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு  ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ  விக்ரஹத்தை இன்றும்  தேவநாத பெருமாள்  சந்நிதியில்  காணலாம்......
திருப்பதி சென்று  தயா சதகம் இயற்றினார்.  பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர். 
ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர்  சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி  என்ற ஸ்லோகம் உருவானது.
ஸ்ரீ ரங்கத்தில்  ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான்  வேதாந்த தேசிகர்  என்று நாம் இன்றும் அவரை அறிவது.. 
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.
1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே  பல ஆலயங்களை அழித்தபோது  ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும்  ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும்  எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு  செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து  அரிய  வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன் 
ஸ்ரீ வில்லிப்புத்தூரில்  ஆண்டாளை வழிபாட்டு  கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது  திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.!!!

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம்  தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே  உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம்  என்ன அரிசியோடு என்று கேட்க,      ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும்  என்று  கையால்  கூட  தங்கத்தை தொடாமல்   தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே  எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய  நண்பன் வித்யாரண்யன்  
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா,  நீ  எதற்காக  ஏழ்மையில் வாடுகிறாய்,
வா என்னிடம், இங்கு  உனக்கு நிறைய  பரிசு வழங்க  ஏற்பாடு செய்கிறேன் என்றான் ”  வித்யாரண்யனுக்கு   அவர்  பதிலாக  எழுதியதே  நமக்கு பொக்கிஷமாக கிடைத்த ”வைராக்ய பஞ்சகம்”.”வித்யாரண்யர்
நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.
ஆதி சங்கரர்  ஒரு  ஏழைப் பெண்ணுக்கு  பொன் மழை பெய்ய வைத்த  கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில்  நடந்திருக்கிறதே.
காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,
ஒரு ஏழைப்பையன் தனது  திருமணத்துக்கு உதவி கேட்டபோது ”தம்பி நீ  தேசிகர் என்று ஒருவர்  ரெண்டு தெரு தள்ளி  வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம்  தருவாரே, அவரைப் போய்  கேள்” என்று அனுப்ப, 
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக  வரதராஜ பெருமாள் கோவில் சென்று  தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய்  என  வேண்டினார் தேசிகர்.
”அவரது  மனதைத் தொடும்
”ஸ்ரீ ஸ்துதி”  தாயாரை  உடனே அங்கே ஒரு  பொன்மழை பெய்ய வைக்க  காரணமானது.. 
ஒரு  பாம்பாட்டி தேசிகரிடம்  ”என்னுடைய விஷ  பாம்புகளை  உங்களால் சமாளிக்க முடியுமா?”  என்று சவால் விட,   
அவர் தரையில் ஒரு கோடு  போட்டு 
” உன் பாம்புகள் இந்த  கோட்டைத்  தாண்டட்டும்” என்றார். 
சில விஷ  பாம்புகள்  கோட்டைத் தாண்ட முயன்றபோது  தேசிகர் உச்சரித்த  கருட மந்திர  ஸ்லோகம் கேட்ட  கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை  உணவாகத்  தூக்கிக் கொண்டு போய் விட்டான். 
பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால்,  மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .
”உங்களால் எல்லாமே  செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும்  ஒரு  சாதாரண கிணறு கட்ட முடியுமா  உங்களால்?”  என்று  ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.
”சரியப்பா கட்டுகிறேன்”
 நான் கொடுக்கும் கற்களை மட்டுமே  கொண்டு அதைக் கட்டவேண்டும்”
”ஆஹா  அப்படியே.’ என்ற தேசிகர்  அவன் கொடுத்த  அளவு சரியில்லாத கோணா  மாணா  கற்களைக் கொண்டே  கட்டிய  அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.


தனது உருவத்தை தானே  தேசிகர்  வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.      
மேலே சொன்ன அவர்
கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம்.  கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி 
ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ 
தேசிகர்  101 வருஷம்  வாழ்ந்தார்.  தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர்  தனது குமாரர்  குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ”திருவாய் மொழி,  உபநிஷத்  எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்”  என்றார்.  பரமபதம் அடைந்தார்.  தாயார்  ரங்கநாயகி  தன்னருகே ஒரு சந்நிதியில்  தேசிகரை  இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும்  நிலுவையில் இருக்கிறது.

”ராமானுஜ  தயா பாத்ரம், ஞான வைராக்ய பூஷணம்,


Tuesday, March 07, 2017

gho pooja

வாழ்வை பேசுங்கள் எப்படி வாழ்வதென்று......

வாழ்வும் சாவும் நாவின் சக்தியில் இருக்கிறது என்பது மிக உண்மையான சக்தி வாய்ந்த வாசகம்.

Saturday, March 04, 2017

special school at cuddalore and boy balaji.


the boy was from chennai and his parents  left him here a week ago.till then he is not taking food and crying.

Tuesday, October 18, 2016

நாமம்

🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களை நல்வழிபடுத்தும்.
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களை செயல்படுத்தும்.
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களில் புதைந்திருக்கும் சக்திகளை வெளிப்படுத்தும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களில் பக்தியை உண்டாக்கும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களில் சக்தியை உண்டாக்கும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களை உங்களுக்கே புரியவைக்கும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களை பகவானுக்கு புரியவைக்கும்..
🌿பகவந்நாமம் சொல்லுங்கள், அந்த திருநாமம் உங்களுக்கு பகவானை தெரியவைக்கும்..
🌿ராதே க்ருஷ்ணா சொல்லுங்கள்,
🌿ராம ராம சொல்லுங்கள்
🌿க்ருஷ்ண க்ருஷ்ண சொல்லுங்கள்
🌿ராமகிருஷ்ணா சொல்லுங்கள்..
தாஸன் ரமணபட்டாச்சார் 

Sunday, October 09, 2016

10 BEAUTIFUL LINES / THILLAIYADI

```✒SOMEONE HAS WRITTEN THESE 10 BEAUTIFUL LINES. READ and TRY  to UNDERSTAND the DEEPER MEANING of THEM.

📎 1). PRAYER is not a "spare wheel" that YOU PULL OUT when IN trouble, but it is a "STEERING WHEEL" that DIRECT the RIGHT PATH THROUGHOUT LIFE.

 📎2). Why is a CAR'S WINDSHIELD so LARGE & the REAR VIEW MIRROR so small? BECAUSE our PAST is NOT as IMPORTANT as OUR FUTURE. So, LOOK AHEAD and MOVE ON.


📎3). FRIENDSHIP is like a BOOK. It takes a FEW SECONDS to BURN, but it TAKES YEARS to WRITE.


📎4). All THINGS in LIFE are TEMPORARY. If they are GOING WELL, ENJOY them, they WILL NOT LAST FOREVER. If they are going wrong, don't WORRY, THEY CAN'T LAST LONG EITHER.

📎5). Old FRIENDS are GOLD! NEW friends are DIAMONDS! If you GET a DIAMOND, DON'T FORGET the GOLD! To HOLD a DIAMOND, you ALWAYS NEED a BASE of GOLD!


📎6). Often when WE LOSE HOPE and THINK this is the END, GOD SMILES from ABOVE and SAYS, "RELAX, SWEETHEART; it's JUST a BEND, NOT THE END!"


📎7). When GOD SOLVES your PROBLEMS, you HAVE FAITH in HIS ABILITIES; when GOD DOESN'T SOLVE YOUR PROBLEMS, HE has FAITH in YOUR ABILITIES.


 📎8). A BLIND PERSON asked GOD: "CAN THERE be ANYTHING WORSE THAN LOSING EYE SIGHT?" HE REPLIED: "YES, LOSING YOUR VISION!"
 📎9). When   YOU PRAY for OTHERS, GOD LISTEN to YOU and BLESSES THEM, and SOMETIMES, when you are SAFE and HAPPY, REMEMBER that SOMEONE has PRAYED for YOU.


 📎10). WORRYING does NOT TAKE AWAY TOMORROW'S TROUBLES; IT TAKES AWAY today's PEACE.


If you ENJOYED this, please COPY it and PASS it to OTHERS. It may BRIGHTEN SOMEONE else's DAY, too.....```

Friday, September 09, 2016

reap later.

* If you plant honesty, you will reap trust
* If you plant goodness, you will reap friends
* If you plant humility, you will reap greatness
* If you plant perseverance, you will reap contentment
* If you plant consideration, you will reap perspective
* If you plant hard work, you will reap success
* If you plant forgiveness, you will reap reconciliation
* If you plant faith in God, you will reap a harvest

So, be careful what you plant now; it will determine what you will reap later.

அரசமர வழிபாடு

தோஷம் நீக்கும் அரசமர வழிபாடு
அரச மரத்தை குறிப்பிட்ட நாள், நேரத்தில் சுற்றி வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
1. தீரா நோய் தீர
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.
குறிப்பிட பகுதியில் பாதிப்பு, நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு வைக்கவும். விரைவில் குணம் கிடைக்கும்
2. ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .
3. தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.தோஷம் நீக்கும் அரசமர வழிபாடு

krishna

📬 *க்ருஷ்ணனின் தபால்* 📬

எல்லாமே சில காலம் தான் !

அதனால் யார் மீதும் வெறுப்போ, கோபமோ, அருவருப்போ வேண்டாமே !

இருக்கும் வரை எல்லோரிடமும் அன்போடு, நிதானத்தோடு வாழ்வோமே !

க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு எல்லோரிடமும் ஆனந்தமாய் பழகலாமே !

 *குருஜீ கோபாலவல்லிதாசர்*

க்ருஷ்ணனின் தபால்


📬 *க்ருஷ்ணனின் தபால்* 📬

_நீ யோசிப்பதை விட கண்ணன் கோடி மடங்கு உனக்காக யோசிக்கிறான் !_
_உன் யோசனைகள் அனைத்தையும் கண்ணனுக்கு அர்ப்பணம் செய்திவிடு !_

_கண்ணனின் யோசனைப்படி வாழ்க்கை நடக்க ஒத்துக்கொள் !_
 *குருஜீ கோபாலவல்லிதாசர்*

Monday, September 05, 2016

thillaiyadi cow.

நாட்டுப் பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால்...

முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

நாட்டுப் பசுவும் அதன் புண்ணியங்களும்……..

*நாட்டுப் பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

*நாட்டுப் பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

*நாட்டுப் பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), நாட்டுப் பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.

இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

*நாட்டு பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

*நாட்டுப் பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். நாட்டுப் பசுவின் கால் பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக் கொண்டார்கள்.

*`மா’ என்று நாட்டுப் பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.

*நாட்டுப் பசு வசிக்கும் இடத்தில் நாட்டுப் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

*மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் நாட்டுப் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது நாட்டுப் பசுமாடு சத்தம் போடுகிறது.

*ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் நாட்டுப் பசு தானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த நாட்டுப் பசு மாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

*உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் நாட்டுப் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது நல்ல ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

நாட்டுப் பசுவே நம் கோ மாதா.
நம் கோமாதாவை காப்போம்....!

📬 *Krishna's Message* 📬

🙏📬 *Krishna's Message📬

Something has happened ! So what ?!? Remember whatever happened is for good !_

 _Don't allow your mind to analyse situations negatively ! You are greater than your mind ! Change it 

from  negative to positive by chanting !_

🙏🏼 *Guruji Gopalavallidasar* 🙏🏼r

Saturday, August 27, 2016

Clapping is so effective

Several Amazing Benefits of Clapping:

👏👏👏👏👏👏👏
👏 Clapping is a simple striking beat of hands but it is much more than you think.

👏 Normally, people clap to appreciate others for their good works and achievements, or when they are in mood of joy.

👏 People also clap while singing songs, bhajans, and performing prayers at Holy places.

👏 It is scientifically proved that clapping is a very effective exercise to cure many human diseases.

👏 Clapping activates the receptors in the palms and helps in activation of large area of the brain that helps to improve general health.

👏 There are 38 different Acupressure Points for almost all organs on our palm which are activated by clapping and this action improves our health slowly but effectively.

👏 Daily 10 to 15 minutes of clapping in the morning will keep you fit and active.

👏 Clapping is an effective medicine for people who suffer from digestive disorders.

👏 Clapping is the best cure for backache, neck pain and joint pain.

👏 Gout is a common problem with old age, and can be easily cured by clapping.

👏 Clapping is helpful for patients suffering from Low Blood Pressure.

👏 If someone is suffering from heart and lung related diseases then clapping plays an important role in curing these diseases.

👏 Clapping removes the obstacles from the brain and collateral channels (veins and arteries), and keeps you fit and healthy.

👏 Children practice clapping exercise daily make only few spelling mistakes, and are hard worker than other. Clapping helps to improve their handwriting. The whole abstract of above given points is that clapping sharpen the brain of the children.

👏 Clapping increase the Immunity of the person which provides the strength to the body to fight against diseases.

👏👏👏👏👏👏👏
So clap clap clap,
and clap clap clap !!!
👏👏👏👏👏👏👏